கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு உடனடியாக என்ன தேவை என்பதை அறிந்து இரண்டு மரம் பொடியாக்கும் ( wood chipper Machine) இயந்திரங்களை வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் வழங்கியது.
கஜா புயலில் ஏற்பட்ட பாதிப்பை அறிந்து உடனடியாக அறிக்கை வெளியிட்ட வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.இராசாராம் சீனுவாசன் அவர்கள் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் சங்கத்தின் செயலாளர் திரு.அறிவு இராமலிங்கம் தலைமையில் கஜாபுயல் மீட்புக்குழு அமைத்து நிவாரண உதவிகளை வழங்க ஏற்பாடு செய்தார். அதனையொட்டி கஜா பாதித்த பகுதிகளின் உடனடி தேவைகளை அறிந்து போதிய நிதி திரட்டி இரண்டு மரம் பொடியாக்கும் ( wood chipper Machine) இயந்திரங்களை மரம் அகற்றவும், வீழ்ந்து கிடக்கும் பயனற்ற மரங்களை பொடியாக்கி இயற்கை உரமாகவும், வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும் உதவும் வகையில் வழங்கியது.
இதை மக்களுக்கு பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் திரு. ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதை ஒருங்கிணைத்து சரியான தேவையை அறிந்து உரிய கிராமத்திற்கு பகிர்ந்தளிக்கும் பொறுப்பை காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயளாளர் திரு.ஆறுபாதி ப கல்யாணம் , தொழிலதிபர் மற்றும் எக்ஸ்னோராவின் தலைவர் திரு.செந்தூர் பாரி ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
|