|
||||
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சேர்ந்த தென்னை விவசாயி திருச்செல்வம் தற்கொலை செய்து கொண்டார். |
||||
|
||||
26/11/2018: இன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சேர்ந்த தென்னை விவசாயி திருச்செல்வம் தற்கொலை செய்து கொண்டார். கஜா புயல் சேதத்தால் மனமுடைந்த விவசாயி திருச்செல்வம் தற்கொலை செய்து கொண்டார். அவரது 2 ஏக்கர் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் சாய்ந்ததால் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தனை வருட உழைப்பு வீணானதில் அவர் மனமுடைந்து போய் உள்ளார். இந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத அவர் நேற்று மாலை பூச்சி மருந்து சாப்பிட்டார். இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விவசாயி திருச்செல்வம் நேற்று இரவு பலினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
||||
27 Nov 2018 04:26 AM | ||||
User Comments | |
|