Home  |  News

சோலைவனம் மறு சீரமைப்பு பணிகள்

Contact Person +6584554070 (இளவரசன்) +919443844455 (நெப்போலியன்)
Phone 919443844455
சோலைவனம் மறு சீரமைப்பு பணிகள்

தற்போது நமக்கு கிடைத்திருப்பது செலவில்லாத உரம் (கீழே விழுந்த மரங்கள், இலைகள்). விலைமதிப்பில்லா, மண்ணை வளப்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள். நம் விளைநிலங்களில் புதைத்து மண்ணை வளப்படுத்துவோம்.

 

நம் விவசாயிகள் விழுந்த  தென்னை மரங்களை, அறியாமையால் அப்புற படுத்திவிடவேண்டும் என்றே எண்ணுகின்றனர். இந்த இக்கட்டான சூழலை பயன் படுத்தி சொற்ப விலைக்கு சுயநலக்காரர்கள் மரங்களை ஏற்றி செல்வத்தினால் நம் நிலத்தின் வளப்படுத்த கிடைத்த வாய்ப்பை தவற விடுவதற்கு ஒப்பானது.

 

இன்னும் சில நாட்களில் இவையெல்லாம் நடக்கலாம்:

      1. விவசாயி விழுந்த மரங்களை சொற்ப விலைக்கு விற்கலாம்.

2. அல்லது அதன் மதிப்பு தெரியாமல் ஓரமாக ஒதுக்கிவிடலாம்.

3. சூழலை பயன் படுத்தி அவர்களை விவசாய தொழிலில் இருந்து நகர்த்தி திருப்பூர், சென்னை போன்ற நகரகங்களுக்கு (நரகங்களுக்கு) அப்புறப்படுத்திவிடலாம்.

4. செய்வதறியாது நிலங்களை விற்றுவிடலாம்.

5. இன்னும் பல நடக்கலாம்....

இதைப்பற்றி யோசிக்க யோசிக்க மனம் நிம்மதியின்றி தவிக்கிறது.

 

இதற்கு நாம் என்ன செய்யலாம் என்கிற யோசனைகள்..

இன்னும் சில நாட்களில்: முதற்கட்டமாக  விழுந்த சருகுகளை விளைநிலத்தில் போட்டு மண்ணை உரமேற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். (வாகனத்தில் மைக் செட் வைத்து தொடர் பிரச்சாரத்தின் மூலம் அவர்களையே செய்ய வைக்கலாம்). அவற்றை எரித்துவிடுதற்குள் செய்து முடிக்கவேண்டும்.

 

இன்னும் சில வாரங்களில்: முதல்கட்டம் (மரம் அறுக்கும் கருவி கொண்டு):

1. இரண்டு அடி வீதம் துண்டு துண்டாக நறுக்கி கொடுப்பது (ஊருக்கு 10 இளையதலைமுறையினரை கொண்டு).

2. வெட்டிய துண்டுகளை அடுத்த கட்ட செயல்பாடு செயல்படுத்தும்வரை சேகரித்து வைக்க அறிவுத்துவது. இரண்டு அடி வெட்டப்பட்ட மரங்களை எளிதில் அவர்களால் நகர்த்த இயலும்.

 

இன்னும் சில மாதங்களில்: இரண்டாம் கட்டம் (மரம் அரைக்கும் இயந்திரம் கொண்டு)

1. சேகரித்த மரத்துண்டுகளை அரைத்துக்கொடுப்பது.

2. அரைபட்ட மரத்தூளை எப்படி முறையாக மண்ணில் உரமிடுவது என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

இவை முடிந்த பிறகு: (ஒருங்கிணைந்த மரப்பயிர்களை நடவு செய்ய உதவுவது, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது)

1. ஒரு வருடத்தில் (3 வருடத்தில், 8 வருடத்தில்... இப்படி தனித்தனி பயிரிடும்முறையை கையாள்வது) வருமானம் தரக்கூடிய மரப்பயிர்களை கண்டறிந்து மற்றும் கன்றுகளை உற்பத்தி செய்து தருவது.

2. இயந்திரங்கள் கொண்டு குழிகளை முறையாக ஆழமாக நடுவதற்கு ஊருக்கு 10 இளையதலைமுறையினரை கொண்டு செயல்படுத்துவது.

 

குறிப்பு:

1. ஒற்றை பயிரின் பாதகங்களை எடுத்து சொல்லி ஒருங்கிணைத்த பண்ணைகளை எப்படி நிர்வகிக்கலாம், எப்படி சந்தைப்படுத்தலாம் என்பதுபோன்ற விழிப்புணர்வுகளை அவ்வப்போது ஏற்படுத்துவது.

2. இவைகளை செய்யாது போனால் நம் கண்முன்னே வேளாண் தொழிலும் விலை நிலங்களும் கூறுபோடும் வேலை நடந்துவிடுமோ என்கிற அச்சம் என்னைத்துளைக்கிறது.

3. சுயநல காரர்கள் நினைத்தால் சூது அறியாத நம் விவசாய உறவுகளை எளிதில் ஏமாற்றி நிலங்களை அபகரித்துவிடுவர்.

4. தயவு செய்து சிந்தித்து சேர்ந்து நம்மால் இயன்றதை செய்யவேண்டும்.

  04 Dec 2018 06:03 AM
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு இரண்டு மரம் பொடியாக்கும் இயந்திரங்களை வழங்கிய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
தமிழகத்திலுள்ள 12, 524 கிராம பஞ்சாயத்திற்கும்
கிராமசபை என்றால் என்ன?
பத்து மரம் அறுக்கும் இயந்திரங்களை கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கிய மிசௌரி தமிழ் சங்கம்
பிளாஸ்டிக் தடை எதிரொலி; வாழை இலைக்கு நல்ல கிராக்கி; மகிழ்ச்சியில் விவசாயிகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வாழை பயிரிட வாய்ப்பு
கரம்பக்குடி மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் உயிர் அமைப்பு மூலம் மொத்தம் 10 வீடுகள் கட்ட ஒப்புதல் - பனை நிலத் தமிழ்ச் சங்கம்.
டெல்டா மாவட்ட மறு கட்டமைக்க ஓராயிரம் கரங்கள் தேவை - குழு உருவாக்கம் - நோக்கம், பணிகள்- ஊடக வெளியீடு (28-12-2018)
A ROLE MODEL PROTOTYPE PROJECT The 170 HP USA Brush Chipper Machine shredded around 200 Trees in 4 hours. The cost Per tree comes around Rs 300.
10 பள்ளிகளில் 35 வகையான மூலிகைகள் கொண்ட மூலிகை தோட்டம்
விவசாயிகள் மீண்டும் விவசாயம் தொடங்க உதவுங்கள். நாகை நண்பர்கள் FPO(to be registered soon) குழுக்கள் விவரம் (28 நாகை மாவட்ட கிராமங்களில் ஒரு கூட்டமைப்பு)