கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு அவசியத்தேவை மரம் பொடியாக்கும் கருவிகள். நண்பர்கள், அமைப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐந்து சில கருவிகள் வழங்க முன்வரவும். விவசாய நிலங்களில், தோப்புகளில் விழுந்து கிடப்பதை சுத்தம் செய்யாமல் மீள் பணிகளை செய்யமுடியாத நிலை... Please Help..
=============================================
கஜா புயல் பயணித்த பாதையில் 1 கோடிக்கு மேற்பட்ட தென்னை மரங்களும், 1 கோடிக்கு மேற்பட்ட பிற மரங்களும் வீழ்ந்துள்ளன. 18 நாட்கள் கடந்த நிலையில் நீரில் விழுந்துள்ள மரங்களால் நீர் நிலைகள் மாசடைந்துள்ளன. கீழே கிடக்கும் தென்னைகளில் பூஞ்சை படர்கின்றன. உடனடியாக அவற்றை மறு பயன்பாட்டிற்கு கொண்டுவந்தால் பயனுள்ளதாக மாறும்.இல்லையேல் சுற்றுச்சூழல் இடையூறு வரும்.இயந்திர உதவி இல்லாமல் இவற்றை கையாள்வது எளிதல்ல. தமிழகத்தில் இருந்த பல உயிர்ம ஆற்றல் மின் நிலையங்கள் (Bio mass power plant) மூடபட்ட நிலையில் அங்கிருக்கும் மரசில்லுகளாக்கும் இயந்திரம் (wood chipper) உதவியுடன் பெரிய மரங்களை தூளாக்களாம். இம்மின் நிலையங்களுக்கு எரிபொருள் கொடுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் உள்ள இயந்திர உதவியுடன் இப்பணிகளை மேற்கொள்ளலாம். தென்னை மட்டை தூளாக்கும் இயந்திரம் சில இன்று வந்தடையும்,பிற இயந்திரங்கள் பெரிய அளவில் தேவை.
S.செந்தூர் பாரி.
தலைவர், தமிழ் நாடு ExNoRa.
9444067668.
================================
அன்புள்ள நண்பர்களுக்கு இந்த இயந்திரங்கள் சில வாங்க NRI & உள்ளூர் அமைப்புகள் அல்லது ஆர்வமுள்ள நண்பர்கள் முன் வந்தால் மிக உதவியாக இருக்கும். இது போன்ற பல வருடங்கள் பயன்படும் இயந்திரங்கள் மற்றும் கிராமம் முழுவதும் பயன்படும் நிரந்தர கட்டமைப்புகளை நம்மால் முடிந்த அளவு உருவாக்கலாம். இவைகள் நோக்கி நம் செயல்பாடுகள் இருப்பது பயனளிக்கும்
அன்புடன்
ஆறுபாதி ப. கல்யாணம்
+91 94430 93447
==========================
Please visit www.GAJAHelp.ValaiTamil.Com for all other required help and affected villages and adopted/help needed village details along with population data.
|