Home  |  News

கஜா நம் குழு என்ன செய்து கொண்டிருக்கிறது? (நான் கடந்த வியாழன் சென்னை வந்தேன்)-ஜெகதீஸ்வரன்

Contact Person ஜெகதீஸ்வரன்
Phone +91 97910 50512
கஜா நம் குழு என்ன செய்து கொண்டிருக்கிறது? (நான் கடந்த வியாழன் சென்னை வந்தேன்)-ஜெகதீஸ்வரன்
1. நிவாரண உதவி செய்த 80க்கும் அதிகமான கிராமங்களில் தற்போதைய தேவை என்ன என்று ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் நம்முடைய தொடர்புகள் கொண்டு விசாரிக்கப்பட்டது. அதில் இன்னும் பல கிராமங்களில் மின்சாரம் சீரமைக்கப்படாத சூழலில் சில கிராமங்கள் - இராசாப்பட்டி, சோனகம்பட்டி ஆகிய கிராமங்கள் தங்களுக்கு மெழுகுவர்த்தியும் கொசுவர்த்தியும் தேவை என தெரிவித்தார்கள் அவை அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2. முழுமையாக சிதிலமடைந்த வீடுகளை இனம் கண்டு அவர்களுக்கு அந்த வீடுகளை மறுபடியும் கட்டிக்கொடுக்கும் ஒரு முயற்சியும் நடந்து வருகிறது. அதன் பொருட்டு ராயப்பட்டி என்னும் கிராமத்தில் நாங்கள் ஏற்கனவே சொல்லியிருந்தது போல் தலையில் கல் விழுந்து தன்னுடைய குழந்தையை இழந்த புவனேஸ்வரி என்னும் பெண்ணிற்கு - http://bit.ly/Gajadevastation மறுபடியும் வீடு கட்டும் பணி 2 நாட்களுக்கு முன் துவங்கி நேற்று முடிந்துவிட்டது. இதற்கான நிதி ஜெர்மன் நாட்டு மாணவர்களிடம் இருந்து வந்துள்ளது - http://m.dinamalar.com/nridetail.php?id=12171. மீதம் இருக்கும் நிதியை கொண்டு மற்ற வீடுகளுக்கும் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. 3. விவசாயக் கூலிகளுக்கான வாழ்வாதாரம் - மாற்று தொழில் குறித்து தொடர்ச்சியாக பேசி வருகிறோம்.அந்தந்த கிராம மக்களும் அவர்களுடைய ஆர்வத்தை நம்மிடம் தெரிவித்து வருகிறார்கள்.அதற்கான பணி நடந்து வருகிறது. கூடிய விரைவில் ஏதாவது ஒரு கிராமத்தில் இந்த மாற்றுத்தொழில் முழுமை செய்யப்பட்டு மற்ற கிராமங்களிலும் இது தொடரும். 4. கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்திற்கு தொடர்ந்து மறு கட்டமைப்பிற்காக பல குழுக்கள் பணி செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து டெல்டா மாவட்ட கட்டமைப்பு குழு ஒன்றை உருவாக்கி தொடர் பணிகளை செய்ய வேண்டும் என்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. அதற்கான சில சந்திப்புகளும் நடந்துள்ளன. விரைவில் அதிக தகவல்கள் பகிரப்படும். தற்போதைய மிகப்பெரிய தேவையாக தொடர்ந்து இருப்பது மரம் அறுக்கும் இயந்திரங்களும் மனிதர்களும் விவசாயிகளின் நிலத்தில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றுவதற்கு அதிக அளவில் தன்னார்வலர்களும் அதற்குண்டான உபகரணங்களும் தேவைப்படுகிறது இளைஞர்கள் இன்னும் பலபேர் முன்வந்தால் இந்த வேலையை சீக்கிரம் செய்து பல விவசாயிகளின் உயிர்களை காப்பாற்றலாம். அதேபோல விழுந்து கிடக்கும் தென்னை மரங்களை வைத்து ஏதாவது புதியதாக ஒன்றை உருவாக்கலாமா என்ற out of box thinking தேவைப்படுகிறது. - ஜெகதீஸ்வரன் 11.12.2018
  12 Dec 2018 08:51 AM
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு இரண்டு மரம் பொடியாக்கும் இயந்திரங்களை வழங்கிய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
தமிழகத்திலுள்ள 12, 524 கிராம பஞ்சாயத்திற்கும்
கிராமசபை என்றால் என்ன?
பத்து மரம் அறுக்கும் இயந்திரங்களை கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கிய மிசௌரி தமிழ் சங்கம்
பிளாஸ்டிக் தடை எதிரொலி; வாழை இலைக்கு நல்ல கிராக்கி; மகிழ்ச்சியில் விவசாயிகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வாழை பயிரிட வாய்ப்பு
கரம்பக்குடி மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் உயிர் அமைப்பு மூலம் மொத்தம் 10 வீடுகள் கட்ட ஒப்புதல் - பனை நிலத் தமிழ்ச் சங்கம்.
டெல்டா மாவட்ட மறு கட்டமைக்க ஓராயிரம் கரங்கள் தேவை - குழு உருவாக்கம் - நோக்கம், பணிகள்- ஊடக வெளியீடு (28-12-2018)
A ROLE MODEL PROTOTYPE PROJECT The 170 HP USA Brush Chipper Machine shredded around 200 Trees in 4 hours. The cost Per tree comes around Rs 300.
10 பள்ளிகளில் 35 வகையான மூலிகைகள் கொண்ட மூலிகை தோட்டம்
விவசாயிகள் மீண்டும் விவசாயம் தொடங்க உதவுங்கள். நாகை நண்பர்கள் FPO(to be registered soon) குழுக்கள் விவரம் (28 நாகை மாவட்ட கிராமங்களில் ஒரு கூட்டமைப்பு)