கஜா புயலால் கடல் நீர் உட்புகுந்த பகுதிகள்!
புதுப்பள்ளி கிராமம், நாகப்பட்டினம் மாவட்டம்.
15 டிசம்பர் 2018 நிலவரம்.
இக்கிராமம் கடலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சவுக்கு தோப்பிற்கு பின் உள்ளது. புயல் அடித்து ஒரு மாதம் ஆகியும் மீள மக்கள் போராடுகிறார்கள் :(
கஜா புயல் அன்று இரவு சில மணி நேரத்தில் நடந்த பல துயரங்கள். தாங்களே மீண்டு எழ நினைக்கும் நம் மக்கள், கடல் நீர் புகுந்த பூமியை மாற்ற வழிமுறைகள் கேட்கும் மக்கள்.
கண்டிப்பாக இக்காணொளியை பாருங்கள் நேற்று அக்கிராமத்தில் எடுத்தது.
இதே நிலைதான் 30 கிமீ தூரத்தில் உள்ள விழுந்தமாவடி தொடங்கி புதுப்பள்ளி வேட்டைக்காரணிருப்பு கோவில்பத்து வெள்ளபள்ளம் நலுவேதபதி புஷ்பவனம் வேதாரண்யம் வரை உள்ள கரையை ஒட்டி 2 கிமீ தூரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும். இதில் புஷ்பவனத்தில் கடல் சேறு மிக அதிகமாக தள்ளப்பட்டுள்ளது.
உடனடித் தேவை அவர்களுக்கு கடல் உப்பு நீர் புகுந்த நீர் நிலைகளையும் மண்ணையும் பழைய நிலைக்கு இயற்கை முறையில் மாற்றுவது. கடல் நீர் மீண்டும் உட்புகாமால் இருக்க மண் மேடுகளை வலுவாக உருவாக்குவது..
அடுத்த பதிவில் நிலவரம் மற்றும் தேவை பற்றி விரிவாக பதிவிடுகிறேன்.
https://www.facebook.com/deepak.venkatachalam.7/videos/10205439070534066/
#கஜாபேரிடர்
#மகிழ்வித்துமகிழ்
|