l3 ஏக்கர் விவசாயியின் நிலையே இதுவெனில் ?
அய்யா இறையரசன் அவர்களுக்கும் மற்ற உறவுகளுக்கும் வணக்கம்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு என பதிவு செய்துள்ளீர்கள்.
நல்லது. நன்றி
நான் டெல்டாவில் உள்ள 13 ஏக்கர் தென்னை சாகுபடி செய்து முற்றிலும் வருவலாய் ஆதாரம் அழிந்த ஒரு விவசாயி ...
எனது பெயர்
வீ.எஸ். என்கிற
சுப்ரமணியன்
தில்லங்காடு
மு.ஊ.ம.த
மு.கவுன்சிலர்
பட்டுக்கோட்டை தாலுக்கா.
நல்ல முன்னெடுப்பு
புயல் பாதிக்கப்பட்ட
மாவட்டங்களில் உணவு தேவை ஓரளவு சரியானது
வேறு தேவைகளும் சரியாகிகொண்டு வருகிறது. ஆனால் மிக முக்கிய தேவை ஒன்று விவசாயிகளை சூழ்ந்துள்ளது அது அவர்களின் கனவை தகர்க்க கூடிய பிரச்சனை இதுவரை யாரும் சிந்திக்க மறுக்கிறார்கள்.
ஒரு 13 ஏக்கர் தென்னை விவசாயிகளின் குழந்தைகளின் கல்வி இனி தொடர முடியா நிலை. கல்வி ஆண்டு கட்டணம் செலுத்தியவர்களுக்கும், மாதாந்திர விடுதி கட்டணம் செலுத்த வழியில்லா நிலையில் தெழில்நுட்ப,மருத்துவம் சார்ந்தகல்வி பயிலும் குழந்தைகளின் படிப்பை பாதியில் இந்த மாதமே நிருத்தும் அளவுக்கு
வருமையில் தவிக்கிறார்கள். பல கனவுகளோடு கல்லூரி படியேறிய எங்கள் வாரீசுகளின் படிப்பு பாதியிலேயே கஜா புயலால் வீழ்த்தபடும் அவலம் நேர்ந்துள்ளது.
சாதாரண பட்ட படிப்பு என்றால் வீட்டிலிருந்து தொலைதூர கல்வி மூலம் தெடர்ந்திடலாம் ஆனால் தொழில்நுட்ப கல்வி மாணவ,மாணவிகள் என்ன செய்ய இயலும். அதுபோன்ற பதிவை பார்க்கும் உங்களை போன்றோர் பத்திரிக்கையாளர் கள் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை உங்களுக்கு தெறிந்த நண்பர்கள் குழுந்தைகளை ஒரு வருடத்திற்க்கு விடுதி கட்டணமாவது செலுத்தி கல்வியை தொடர வாய்ப்பளிக்க வேண்டுமாய் தமிழ் சமூகத்தின் பாதத்தில் என் கோரி்க்கையை கிடத்துகிறேன்.
இதற்க்கு பத்திரிக்கைகள் முக்கியதுவம் கொடுத்து எழுத வேண்டும் எனவும் கண்ணீருடன் வேண்டுகிறேன்.
.......வீ.எஸ்+91 97158 71686
|