|
|||||||||||
கீழ்க்கண்ட அவசர நடவடிக்கைகளை வேண்டுகிறோம் -ஆறுபாதி ப.கல்யாணம் |
|||||||||||
|
|||||||||||
பெறுதல்: மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி S. பழனிச்சாமி அவர்கள்
திரு,வருவாய் துறை செயலாளர் அவர்கள்
திரு, வேளாண்மை துறை செயலாளர் -
திரு, வேளாண் துறை இயக்குநர் -
திரு . J.ராதாகிருஷ்ணன் IAS
திருமதி அமுதா IAS - திரு சுனில் பாலிவால் IAS
திரு. மாவட்ட ஆட்சியர்கள் தஞ்சை நாகை, திருவாரூர் & புதுக்கோட்டை மாவட்டங்கள்
ஐயா, வணக்கம்.
கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் மிக மோசமான பேரழிவு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவல்களின் படி மூன்று மாவட்டங்களில் உள்ள 35 ஒன்றியங்களில் தெற்கு பகுதியில் உள்ள 17 ஒன்றியங்களில் மிக மோசமான பேரழிவு ஏற்பட்டுள்ளது.மொத்தமுள்ள அனைத்து மரங்களிலும் 60% -75% மரங்கள் முறிந்து சாய்ந்து கிடக்கின்றன. நெற்பயிர்கள் கிழிந்து சிதைந்துள்ளன. தென்னை, மா,புளி மற்றும் மர மதிப்புள்ள தேக்கு, வேம்பு உள்ளிட்டவை களின் சேதங்களை வருவாய் கிராம வாரியாக முழுமையாக கணக்கெடுப்பு செய்தால் தான் முழுமையாக நஷ்டங்களை கணக்கிட முடியும்
தமிழக அரசு புயல் வரும் முன் மேற்கொண்ட நடவடிக்கைகளால் மனித உயிர்ச்சேதம் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. எனினும் புயலுக்கு பிந்தைய நடவடிக்கைகளில் காணப்படும் தாமதம் உடனே போக்க நடவடிக்கை வேண்டுகிறோம்.
கீழ்க்கண்ட அவசர நடவடிக்கைகளை வேண்டுகிறோம்
#. கூரை வீடுகளில் மூட உடனடியாக தரமான தார்ப்பாலின் வழங்க வேண்டும்.
#. கிராம பஞ்சாயத்து பொது குடிநீர் வழங்க போதிய ஜெனரேட்டர் வசதி வேண்டும்.
#. மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருள்கள் குறைந்தது 15 தினங்களுக்கு வழங்க வேண்டும்.
#. அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்க மிக போர்க்கால நடவடிக்கை தேவை.
#. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய சான்றிதழ் வழங்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளதால் கால நீட்டிப்பு 15-12-2018 வரை செய்ய நடவடிக்கை வேண்டும். தற்போது 30-11-2018 க்குள் அனைத்து விவசாயிகளும் பயிர்காப்பீடு செய்ய இயலாது.
5. தேசிய பேரிடர் நிவாரண விதிகளில் பயிர் இழப்பு இடுபொருள் மானியம், மிக மிக குறைவாக உள்ளதால் மாநில அரசு விவசாய அமைப்புகளுடன் பேசி கூடுதல் இடுபொருள்மானியம் வழங்க வேண்டும்.
#. மிக மிக முக்கியமாக கிராம அளவில் துல்லியமாக பயிர்கள்/மரங்கள் பாதிப்பு கணக்கீடு மிகவும் அவசியம் ஆகும். மேலும் காவிரி டெல்டாவின் எஞ்சிய 18 ஒன்றியங்களிலும் வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சேதமும், கடலோர தாலுக்காக்களில் நெல் பயிர்கள் மஞ்சளாகியும் உள்ளன.
இவைகள் குறித்து உடனடியாக நடவடிக்கைகளை வேண்டுகிறோம்.
தங்கள்
ஆறுபாதி ப.கல்யாணம்
பொதுச்செயலாளர்
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு காவிரி டெல்டா மாவட்டங்கள்
அலைபேசி :
9443093447
பெறுதல்: மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி S. பழனிச்சாமி அவர்கள் திரு,வருவாய் துறை செயலாளர் அவர்கள் திரு, வேளாண்மை துறை செயலாளர் - திரு, வேளாண் துறை இயக்குநர் - திரு . J.ராதாகிருஷ்ணன் IAS திருமதி அமுதா IAS - திரு சுனில் பாலிவால் IAS திரு. மாவட்ட ஆட்சியர்கள் தஞ்சை நாகை, திருவாரூர் & புதுக்கோட்டை மாவட்டங்கள் ஐயா, வணக்கம். கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் மிக மோசமான பேரழிவு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவல்களின் படி மூன்று மாவட்டங்களில் உள்ள 35 ஒன்றியங்களில் தெற்கு பகுதியில் உள்ள 17 ஒன்றியங்களில் மிக மோசமான பேரழிவு ஏற்பட்டுள்ளது.மொத்தமுள்ள அனைத்து மரங்களிலும் 60% -75% மரங்கள் முறிந்து சாய்ந்து கிடக்கின்றன. நெற்பயிர்கள் கிழிந்து சிதைந்துள்ளன. தென்னை, மா,புளி மற்றும் மர மதிப்புள்ள தேக்கு, வேம்பு உள்ளிட்டவை களின் சேதங்களை வருவாய் கிராம வாரியாக முழுமையாக கணக்கெடுப்பு செய்தால் தான் முழுமையாக நஷ்டங்களை கணக்கிட முடியும் தமிழக அரசு புயல் வரும் முன் மேற்கொண்ட நடவடிக்கைகளால் மனித உயிர்ச்சேதம் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. எனினும் புயலுக்கு பிந்தைய நடவடிக்கைகளில் காணப்படும் தாமதம் உடனே போக்க நடவடிக்கை வேண்டுகிறோம். கீழ்க்கண்ட அவசர நடவடிக்கைகளை வேண்டுகிறோம் #. கூரை வீடுகளில் மூட உடனடியாக தரமான தார்ப்பாலின் வழங்க வேண்டும். #. கிராம பஞ்சாயத்து பொது குடிநீர் வழங்க போதிய ஜெனரேட்டர் வசதி வேண்டும். #. மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருள்கள் குறைந்தது 15 தினங்களுக்கு வழங்க வேண்டும். #. அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்க மிக போர்க்கால நடவடிக்கை தேவை. #. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய சான்றிதழ் வழங்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளதால் கால நீட்டிப்பு 15-12-2018 வரை செய்ய நடவடிக்கை வேண்டும். தற்போது 30-11-2018 க்குள் அனைத்து விவசாயிகளும் பயிர்காப்பீடு செய்ய இயலாது. 5. தேசிய பேரிடர் நிவாரண விதிகளில் பயிர் இழப்பு இடுபொருள் மானியம், மிக மிக குறைவாக உள்ளதால் மாநில அரசு விவசாய அமைப்புகளுடன் பேசி கூடுதல் இடுபொருள்மானியம் வழங்க வேண்டும். #. மிக மிக முக்கியமாக கிராம அளவில் துல்லியமாக பயிர்கள்/மரங்கள் பாதிப்பு கணக்கீடு மிகவும் அவசியம் ஆகும். மேலும் காவிரி டெல்டாவின் எஞ்சிய 18 ஒன்றியங்களிலும் வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சேதமும், கடலோர தாலுக்காக்களில் நெல் பயிர்கள் மஞ்சளாகியும் உள்ளன. இவைகள் குறித்து உடனடியாக நடவடிக்கைகளை வேண்டுகிறோம். தங்கள் ஆறுபாதி ப.கல்யாணம் பொதுச்செயலாளர் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு காவிரி டெல்டா மாவட்டங்கள் அலைபேசி : 9443093447 |
|||||||||||
21 Nov 2018 04:15 PM | |||||||||||
User Comments | |
|