|
||||
பிளாஸ்டிக் தடை எதிரொலி; வாழை இலைக்கு நல்ல கிராக்கி; மகிழ்ச்சியில் விவசாயிகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வாழை பயிரிட வாய்ப்பு |
||||
|
||||
பிளாஸ்டிக் பொருட்களின் தடையால், வாழை இலைகளின் தேவை அதிகரித்து, விலையும் அதிகரித்திருப்பதால், இலை வாழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை தொண்டாமுத்துார் வட்டாரத்தில் சுமார், 10 ஆயிரம் எக்டர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.வாழையில், இலை வாழை, காய் வாழை என தனித்தனியாக நடவு செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் வரை, இலை வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள், வாழை இலைகளுக்கு சந்தையில் நுாறு ரூபாய் கூட கிடைக்காமல் இருந்தனர்.பிளாஸ்டிக் தடை காரணமாக, ஓட்டல், இறைச்சிகடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றுப்பொருளாக வாழை இலை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால், வாழை இலைகளின் தேவை அதிகரித்து விலையும் அதிகரித்துள்ளது.
இலை வாழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நரசீபுரம் விவசாயி மணிகண்டன் கூறியதாவது:''எங்கள் காட்டில், 5 ஏக்கரில் இலை வாழை நடவு செய்துள்ளோம். இலை வாழையில், 10 முதல் 12 மாதங்கள் வரை இலை வெட்டி எடுத்துக்கொள்வோம். கடந்த வாரம் வரை, 100 இலைகள் அடங்கிய ஒரு இலைக்கட்டுக்கு 50 ரூபாய் முதல் 90 ரூபாய் வரையே விலை கிடைத்தது.பிளாஸ்டிக் தடை காரணமாக, 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த வழக்கங்களின்படி, தற்போது, கறிக்கடைகளில், வாழை இலையில் கறி கட்டி தருகின்றனர். உணவகங்களிலும் வாழை இலை பயன்படுத்தப்படுகிறது.
இதனால், வாழை இலைகளுக்கு கிராக்கி அதிகரித்து, உள்ளூர் சந்தையில், ஒரு கட்டு வாழை, 280 - 320 ரூபாய்க்கும், நகர சந்தைகளில், 500 - 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 100 - 120 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. தைப்பொங்கல் சமயங்களில், திருவிழா, சுபநிகழ்ச்சி காலம் துவங்கும். அப்போது விலை இன்னும் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.வாழை இலை பயன்பாட்டால், இலை வாழை விவசாயிகளின் வாழ்வு வளம் பெறும்; பயன்படுத்தும் மக்களின் ஆரோக்கியமும் நலம் பெறும்.
பிளாஸ்டிக் பொருட்களின் தடையால், வாழை இலைகளின் தேவை அதிகரித்து, விலையும் அதிகரித்திருப்பதால், இலை வாழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
--------------- கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசின் பாலிசி மாற்றங்கள் உருவாக்கியுள்ள "வாழை இலை" பயன்பாட்டினை முறையாக சந்தைப்படுத்தி பொருளாதாரம் ஈட்டலாம்.
|
||||
04 Jan 2019 06:16 PM | ||||
User Comments | |
|