நாள் :டிச 13 வியாழன் மாலை மிக சரியாக 5.30 மணிக்கு.
இடம் :போலாரீஸ் பில்டிங்,
அண்ணா சாலை
( பிரிட்டீஷ் கௌன்சில்
அருகில்), சென்னை.
அனைவருக்கும் வணக்கம்!
உங்கள் பலரின் பேராதரவோடு புயலில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்காக நாங்கள் டெல்டா மாவட்டங்களை நோக்கி சென்றதை நீங்கள் அனைவரும் அறிந்ததே.
கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் நமக்கு தெரிந்த சில தன்னார்வலர்கள் அங்கேயே இருந்து 35,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 250 ற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு உதவியுள்ளோம். அதுமட்டுமல்லாமல் மரங்கள் அகற்றுவதற்காக இயந்திரங்களைக் கொண்டு கிராமங்கள் அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், மற்றும் அரசு சம்பந்தப்பட்ட இடங்கள், பொது இடங்களில் சூழ்ந்திருந்த மரங்களை வெட்டி, தூய்மைப்படுத்தி அகற்றினோம். இன்னும் நிறைய செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது ஏனெனில், ஒட்டு மொத்த டெல்டா மாவட்டங்களிலும் 42 சதவீதம் மின் இணைப்பு மட்டுமே வந்துள்ளது.
எங்களைப் போன்றே அதிக அளவில் பாதிக்கப்பட்ட அனைத்து டெல்டா மாவட்டங்களிலும் பல நண்பர்கள், பல்வேறு தரப்பட்ட குழுவினர்கள் தொடர்ந்து தங்களது பங்களிப்பை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற வாக்கிற்கிணங்க, இப்போது இனிவரும் காலங்களில் இதுவரை உதவிகள் அளித்த, இனிமேல் பங்களிக்க உள்ள அனைவரும் ஒன்றிணைந்து டெல்டா மாவட்ட மறுகட்டமைப்பு என்ற ஒரு குழு துவங்கி இந்த குழுவின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களின் வாழ்க்கை முறையை உயர்த்திட நாம் அனைவரும் ஒன்றிணைவோம். தனியாக செய்ய வேண்டும் என்று எண்ணினால் இது சாத்தியமில்லை அனைவரும் ஒன்று கூடினால் மட்டுமே சாத்தியம். நீங்கள் அனைவரும் அளித்த அன்பும், ஆதரவும், உதவியும் இவை அனைத்தும் தான் எங்களை இத்தனை நாள் செய்ய வைத்தது. இப்போது அனைவரும் ஒன்றிணைந்து டெல்டா மாவட்ட மறுகட்டமைப்பு குழுவின் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து நம் மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கலாம் என்று எண்ணி இதற்கான ஆலோசனை மீட்டிங் வருகின்ற வியாழக்கிழமை மாலை (13.02.2018) உருவாக்கியுள்ளோம். உங்களிடம் ஏதேனும் ஆலோசனைகளோ அல்லது யோசனைகள் இருந்தால் வரவேற்கத்தக்கது அதன்மூலம் டெல்டா மாவட்டங்களுக்கு உதவிகள் செய்தது மட்டும் இல்லாமல் அவர்களை வாழ்க்கை திறனை மேம்பட செய்து, டெல்டா மாவட்டங்களை மறுகட்டமைப்பு செய்து அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்த நம்மால் என்ன முடியும் என்பதை கூட யோசித்து செயல்பட உள்ளோம். அதுமட்டுமல்லாமல், இனிவரும் காலங்களில் இயற்கை சீற்றங்களால் மக்கள் கவலைப்படும் அளவிற்கு ஏதாவது நடந்தால் இந்த குழு அதற்காக செயல்பட்டு அனைத்து மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க உதவியாக இருக்க போகிறது இதற்கு பேராதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி,
டெல்டா மறு கட்டமைப்பு குழு
தொடர்பு - பாலு - 9791005771, ஜெகதீஷ் - 9791050512, ஹரி - 9791126662
களத்தில் இருந்த மற்ற நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிரவும்.
|